24 6620ac5a607b1
இலங்கைசெய்திகள்

குற்றங்களை கண்டறிய விசேட நடவடிக்கை

Share

குற்றங்களை கண்டறிய விசேட நடவடிக்கை

குற்றங்களைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்கு பொலிஸ் சிசிடிவி (CCTV) கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் சிசிடிவி அமைப்புகளை ஒருங்கிணைக்க பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்ப கட்டத்தில், கொழும்பு (Colombo) நகரில் உள்ள குடியிருப்புக்கள் உட்பட தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 2000 சிசிடிவி கமெராக்கள் பொலிஸாரின் வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ளதுடன் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள சிசிடிவி கமரா அமைப்புக்களுடன் பொலிஸ் சிசிடிவி அமைப்பை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், குற்றச் செயல்களைத் தடுப்பதில் அவற்றின் தற்போதைய பங்களிப்பு குறைவாக உள்ளதுடன் பொலிஸ் திணைக்களத்திடம் 176 சிசிடிவி கமராக்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...