5 1
இலங்கைசெய்திகள்

மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

Share

மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனுராதபுரம் நடுநிலைப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகா வித்தியாலயம், தேவானம்பியதிஸ்ஸ புர மகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம், மிஹிந்தலை கம்மலக்குளம் வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை வித்தியாலயம் என்பவற்றுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக பாடசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையானது பாடசாலை நேரத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கூறுகையில், அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் 1 மணிக்கு நிறுத்தப்படும்.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கினை வழங்குமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

கல்வி அமைச்சு எமக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான கொடுப்பனவாக 46 பில்லியன் நிதி, இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

கூடுதலாக, பரீட்சை திருத்த கட்டணங்களை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கடந்த ஆண்டு குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...