rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்

Share

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்

நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள இந்த மக்கள் ஆணை நேரடியாகக் கிடைத்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்காகும். அந்தப் பதவிக்காலத்தின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.

அதற்குச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நாமே தெரிவு செய்தோம். அவர் ஐ.தே.கட்சியின் தலைவராக இருந்தாலும் தற்போது அவர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...