1732595417 1732590901
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு விசேட சிகிச்சை ஏற்பாடு! தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு!

Share

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், உயிர் தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை அத்திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 125 0461
கிளிநொச்சி மாவட்டம்: எம்.ராகவன் – 077 625 7977
யாழ்ப்பாணம் மாவட்டம்: வித்தியா நமசிவாயம் – 077 537 4464
முல்லைத்தீவு மாவட்டம்: எஸ்.தமிழ்செல்வன் – 077 358 0720
மன்னார் மாவட்டம்: ரேமன் – 076 649 9107

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும், இழப்பீட்டு மதிப்பீடுகள் மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 1
இலங்கைசெய்திகள்

சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை: வெள்ளப் பகுதிகளின் கண் தொற்றுகள் பரவும் அபாயம் – மக்கள் அவதானம்!

வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் (Eye Infections) எளிதில் பரவக்கூடும்...

25 69329d0e7c401
இலங்கைசெய்திகள்

பலத்த மின்னல் எச்சரிக்கை: மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அபாயம்! பொதுமக்கள் பாதுகாப்பாய் இருக்க அறிவுறுத்தல்

பலத்த மின்னலுக்கான முன் எச்சரிக்கை அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre –...

25 69340bc828c36
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் அதிர்ச்சி: 38 நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர் மீது 45 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு!

பிரித்தானியாவில் மருத்துவராகப் பணியாற்றிவந்த ஒருவர், 13 வயதுக்குக் குறைவான பிள்ளைகள் உட்பட 38 நோயாளிகளிடம் அத்துமீறியதாக...

25 69341a3e0ac8b
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி கோமா நிலை: தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது கீழே விழுந்தாரா? முரண்பட்ட தகவல்கள்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கோமா...