24 663087d779737
இலங்கைசெய்திகள்

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான அறிவித்தல்

Share

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான அறிவித்தல்

கொழும்பின் சத்தம் வீதி, லோட்டஸ் வீதி, இலங்கை வங்கி மாவத்தை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகனங்கள் மாற்றுவழிகளில் திருப்பி அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐ.ம.ச கட்சியின் மே தின கூட்ட மேடையாலேயே இந்த வாகன நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் (colombo) நாளை (01.4.2024) விசேட போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, 19 மே தினக் கொண்டாட்டங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மே தினம் காரணமாக, கொழும்பில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய மாற்றுப் பாதைகள் குறித்த விரிவான வரைபடங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...