24 672760cf22d0b
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Share

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலின் பின்னர் 25 பேர் கொண்ட முறையான அமைச்சரவை ஒன்றை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும்.

கிராமப் புற மக்களின் வறுமையை தீர்க்க விசேட திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. இது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

2025ஆம் ஆண்டு முதல் நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட உதவித் தொகை ஒன்றை வழங்கவும் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...