10 27
இலங்கைசெய்திகள்

சபாநாயகர் எம்.பி.க்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Share

நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது நிலையியற் கட்டளைகளை கடைபிடிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தோடு, நிலையியற் கட்டளை 27(2) ஐ தவறாகப் பயன்படுத்துவது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் (21) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் பிற கட்சித் தலைவர்களும் சமீபத்தில் எழுப்பிய கேள்விகளை வாய்மொழி கேள்விகளாகவோ அல்லது ஒத்திவைப்பு விவாதத்தின் போது இன்னும் பொருத்தமாக முன்வைத்திருக்கலாம் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல கட்சித் தலைவர்கள் தொடர்பில்லாத கேள்விகளை எழுப்புவதன் மூலம் நிலையியற் கட்டளைகளை மீறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளும் நாடாளுமன்ற நடைமுறைக்கு கண்டிப்பாக இணங்க வேண்டும் எனவும் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...