சிறுவர்களை தேடி நாடு முழுவதும் நடந்த தேடுதல் நடவடிக்கை

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 9

யாசகம் கேட்டல் மற்றும் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் சிறுவர்களை தேடி நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை(19.06.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸ்ஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி, குருணாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 21 சிறுவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version