rtjy 230 scaled
இலங்கைசெய்திகள்

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்

Share

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்

மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று(19.10.2023) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், பேருந்துகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்துகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் அதே வழியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...