21 15
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆபத்தான இடமாக மாறியுள்ள தென் மாகாணம்

Share

இலங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இரண்டாவது மாகாணமாக தென் மாகாணம் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய ஒரு அறிவியல் ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியை ருஹுணு பல்கலைக்கழகம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியின் மூலம் குற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பந்து ஹரிச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையில் அதிக குற்றச்செயல்கள் இடம்பெறும் மாகாணமாக மேல் மாகாணம் பதிவாகி உள்ளது. பாதுகாப்புக் குழுவில், குற்றங்களுக்கு காரணமான சமூகப் பிரச்சினைகளை ஆராய அறிவியல் ஆராய்ச்சி நடத்த முடிவு செய்தோம்.

போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் குற்றங்களுக்கு காரணமா? நில அபகரிப்பு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

குற்றங்கள், குற்ற இடங்கள் மற்றும் நீதிமன்ற தண்டனை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள் பொலிஸாரிடம் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...