10 51
இலங்கைசெய்திகள்

உலகை உலுக்கிய தென் கொரிய விமான விபத்து: விசாரணையில் வெளியான முக்கிய ஆதாரங்கள்

Share

தென் கொரியாவில்(south korea) கடந்த டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் பறவை மோதியே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஜெஜு ஏர்(Jeju Air) விமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, இரண்டு என்ஜின்களிலும் இருந்த இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் பைக்கால் டீல் என்ற இடம்பெயர்ந்த வாத்து வகையைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே பறவை மோதியமையினாலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது விமானம் விபத்துக்குள்ளானது.

சர்வதேச ஊடகங்களில் வெளியான காணொளியில் விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் விமானத்தில் தீப்பிடித்தது.

இதேவேளை, இந்த விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு விமான பணியாளர்கள் மட்டுமே உயிர் பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...