10 51
இலங்கைசெய்திகள்

உலகை உலுக்கிய தென் கொரிய விமான விபத்து: விசாரணையில் வெளியான முக்கிய ஆதாரங்கள்

Share

தென் கொரியாவில்(south korea) கடந்த டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் பறவை மோதியே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஜெஜு ஏர்(Jeju Air) விமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, இரண்டு என்ஜின்களிலும் இருந்த இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள் பைக்கால் டீல் என்ற இடம்பெயர்ந்த வாத்து வகையைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே பறவை மோதியமையினாலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது விமானம் விபத்துக்குள்ளானது.

சர்வதேச ஊடகங்களில் வெளியான காணொளியில் விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் விமானத்தில் தீப்பிடித்தது.

இதேவேளை, இந்த விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டு விமான பணியாளர்கள் மட்டுமே உயிர் பிழைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...