இலங்கைசெய்திகள்

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

6 15
Share

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

நாடளாவிய ரீதியில் சற்று முன்னர் தீடிரென மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது மின்சாரத் தடை சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

திடீர் மின்சார தடையின் நிமித்தம் வைத்தியசாலைகள், தொழில் நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் என்பன தடைபெற்று மக்கள் பலதரப்பட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

முன்னறிவிப்பின்றி இவ்வாறு மின்சார தடை விதிக்கப்பட்டமை குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டிருந்தால் என்னவாகும் என்பது குறித்தும் மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...