3 2
இலங்கைசெய்திகள்

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

Share

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

மொனராகலையில் இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாய் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொம்பகஹவெல பிரதேசத்திலுள்ள மகனின் காணியிலுள்ள மரத்தில் பலாப்பழம் பறித்த தாய் மற்றும் தந்தை மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காணியை பிள்ளைக்கு தானமாக வழங்கிய பெற்றோர் மற்றுமொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு உணவு தயாரிப்பதற்காக மகனின் காணியிலுள்ள பலாமரத்திலிருந்து காய் ஒன்றை பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...