3 2
இலங்கைசெய்திகள்

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

Share

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

மொனராகலையில் இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாய் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொம்பகஹவெல பிரதேசத்திலுள்ள மகனின் காணியிலுள்ள மரத்தில் பலாப்பழம் பறித்த தாய் மற்றும் தந்தை மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காணியை பிள்ளைக்கு தானமாக வழங்கிய பெற்றோர் மற்றுமொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு உணவு தயாரிப்பதற்காக மகனின் காணியிலுள்ள பலாமரத்திலிருந்து காய் ஒன்றை பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...