12 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

Share

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் வீடு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர், கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர் குவைத்தில் சில காலம் பணிபுரிந்து விட்டு நாட்டுக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த இடத்தை சேர்ந்த ஒருவரே அவரை கடத்துவதற்கான ஒப்பந்தத்தை நான்கு பேருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில குருநாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குறித்த நபர் நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் வெறுமையாக கிடந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இவரை கடத்திய சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....