12 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

Share

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவரை கடத்திய கும்பல்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபர் ஒருவர் வீடு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் குறித்த நபர், கடத்தப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர் குவைத்தில் சில காலம் பணிபுரிந்து விட்டு நாட்டுக்கு வந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குவைத்தில் பணிபுரிந்த இடத்தை சேர்ந்த ஒருவரே அவரை கடத்துவதற்கான ஒப்பந்தத்தை நான்கு பேருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில குருநாகல் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரந்தெனிய சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தனர்.

குறித்த நபர் நேற்றைய தினம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு வந்திருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் வெறுமையாக கிடந்த வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பின்னர் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

இவரை கடத்திய சந்தேகநபர்கள் 31-39 வயதுடைய நாரம்மல மற்றும் கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...