குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சகத்தின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் நிதிப் பிரச்சினைகளால் முடங்கிப்போயுள்ளதுடன், இவ்வாறான வீடுகளை நிறைவு செய்வதற்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்காக இதுவரை பாதியில் முடிக்கப்பட்ட 11,000 வீடுகளை தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

இந்த 11000 வீடுகள் 2015-2019 ஆம் ஆண்டுக்குள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 14000 குறைந்த வருமானம் கொண்ட வீடுகளை சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது திட்டங்களை தயாரித்துள்ளது.

மின்மயமாக்கலுக்கு தெரிவு செய்யப்பட்ட அரைகுறை வீடுகளின் முழுமையான நிர்மாணப்பணிகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வெளிநாட்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், வீட்டு உரிமையாளர் அதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, இந்தத் திட்டம் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தேசிய மின்கட்டமைப்பில் சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடு செய்யப்படும் எனவும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இந்த திட்டத்தின் உள்ளூர் விநியோகங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் மீதமுள்ள தொகை திட்டத்தின் வெளிநாட்டு இறக்குமதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...