24 6657f1ef8bc96
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

Share

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 முதல் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தரம் 9, 10 மற்றும் 11ல் கற்கும் மாணவர்களில் 5.7 வீதமானவர்கள் ஒரு தடவையேனும் புகைபிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களில் 3.7 வீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் கூடுதலாக ஈ சிகரட் வகைகளை புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் புகைப்பழக்கம் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கத்தினால் சுவாச மற்றும் புற்று நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...