இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகினார்

3 29
Share

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகினார

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் செனேஷ் திசாநாயக்க பண்டார பதவி விலகியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின், கடந்த செப்டம்பர் 25ம் திகதி அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராக செனேஷ் பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் உகண்டாவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்த கூற்றை நாடகக் கலைஞர் ஒருவர் கிண்டலடித்த சம்பவம் தொடர்பில் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ரூபவாஹினி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இதனையடுத்து, செனேஷ் திசாநாயக்க பண்டாரவுக்கு பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகியுள்ள செனேஷ் பண்டார, ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...