இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகினார்

Share
3 29
Share

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் பதவி விலகினார

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் செனேஷ் திசாநாயக்க பண்டார பதவி விலகியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின், கடந்த செப்டம்பர் 25ம் திகதி அப்போதைய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராக செனேஷ் பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜபக்‌ஷ குடும்பத்தினர் உகண்டாவில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்த கூற்றை நாடகக் கலைஞர் ஒருவர் கிண்டலடித்த சம்பவம் தொடர்பில் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ரூபவாஹினி செய்திகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இதனையடுத்து, செனேஷ் திசாநாயக்க பண்டாரவுக்கு பதவி விலகுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகியுள்ள செனேஷ் பண்டார, ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையின் சிரேஷ்ட பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...