ஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு

24 663ecc63827e7

ஜனாதிபதி தேர்தல் குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் வேட்பாளரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த உலகில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்தபடியாக சிறந்த ஒழுங்கமைப்பைக் கொண்ட கட்சியாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியினால் ஆதரவு வழங்கப்படும் வேட்பாளரே ஜனாதிபதி என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலை கருத்திற் கொண்டு நடைபெற்ற கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

Exit mobile version