1 5 scaled
இலங்கைசெய்திகள்

பங்காளிகளைத் தக்கவைக்க மொட்டு கடும் பிரயத்தனம்

Share

பங்காளிகளைத் தக்கவைக்க மொட்டு கடும் பிரயத்தனம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபர் பஸில் ராஜபக்ஷவுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைவரம் குறித்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலேயே அந்தச் சந்திப்பில் பிரதமர் பங்கேற்றார்.

மஹஜன எக்சத் பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

மொட்டுக் கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த சுமார் ஏழு பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலேயே, தமது கட்சியின் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காத பிரதமரின் கட்சியுடன் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...