24 66133931ac89a
இலங்கைசெய்திகள்

சஜித்துடன் இணைந்தவர்கள் குறித்து தீர்மானிக்கப்படும்: மொட்டு கட்சி

Share

சஜித்துடன் இணைந்தவர்கள் குறித்து தீர்மானிக்கப்படும்: மொட்டு கட்சி

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்பட உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி (Sri Lanka Podujana Peramuna) அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அண்மையில் சில பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு இணைந்து கொண்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சி தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, வசந்த யாபா பண்டார, டொக்டர் உபுல் கலப்பத்தி மற்றும் கே.பீ.எஸ் குமாரசிறி ஆகியோர் இவ்வாறு சஜித் தரப்புடன் அண்மையில் இணைந்து கொண்டனர்.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் இருந்து செயற்படுவதற்கு பதிலாக வேறும் அரசியல் கூட்டணி ஒன்றில் இணைந்து கொள்வது கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணானது என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாளைய தினம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் சபை கூடி தீர்மானம் எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...