2 23
இலங்கைசெய்திகள்

மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : அநுர அரசுக்கு விழப்போகும் பேரிடி

Share

மகிந்த அமைக்கும் இரகசிய வியூகம் : அநுர அரசுக்கு விழப்போகும் பேரிடி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் (SLPP) ஒரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (11.02.2025) காலை நடைபெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கூட்டம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) மற்றும் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ஆகியோரின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதமும் இது போன்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது போது, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த கலந்துரையாடல் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து ராஜபக்சர்களும் பொதுஜன பெரமுன கட்சியும் பாரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...