24 660eccb925a3c
இலங்கைசெய்திகள்

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

Share

மைத்திரிக்கு எதிராக திரும்பிய சந்திரிக்கா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனு இன்றைய தினம்(04) பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு மைத்திரிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமர்ப்பித்த மனுவில், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரிபால சிறிசேன பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையினால் கட்சிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதன் காரணமாகவே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...