tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி

Share

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி

வெற் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வெற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அறிவிக்கின்றோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

எனினும், மன்றில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த பின்னணியில், ,.இன்று நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டமூலத்தக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...