tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி

Share

வெட் வரி சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ள மைத்திரி

வெற் வரி சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அக்கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வெற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அறிவிக்கின்றோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்றைய தினம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

எனினும், மன்றில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலங்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என சமூக ஆர்வாலர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த பின்னணியில், ,.இன்று நாடாளுமன்றத்தில் சமர்பபிக்கப்படவுள்ள வற் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பது கட்சியின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டமூலத்தக்கு எதிராக அல்லது ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...