24 66403cac2b009
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி

Share

சமூக ஊடகங்களின் வழியாக இடம்பெறும் மோசடி

சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களை வெளியிட்டு பயனாளிகளின் வங்கி விபரங்களை திருடி பணமோசடி செய்வது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இதுவரை 03 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல தெரிவித்துள்ளார்.

பயனர்கள் சில விளம்பரங்களைக் கிளிக் செய்யும் போது, அவர்கள் வேறொரு தகவலுக்குத் திருப்பிவிடப்பட்டு, இந்த வங்கி விபரத்திருட்டு மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

புதிய செயலி ஒன்றை பதிவிறக்கக்கூறி, விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்களின் தொடர்புடைய கொள்வனவை மையப்படுத்தி இந்த மோசடி இடம்பெறுகிறது.

பயனர்கள் புதிய செயலியை கையாள்வதை தொடர்ந்தால், பயனர்களின் கையடக்கத்தொலைபேசியின் கட்டுப்பாடு மூன்றாம் தரப்பினரின் (மோசடிக்காரர்களின்) கைகளுக்கு செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மோசடியாளர் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT) எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....