26 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் விசேட பாதுகாப்பு திட்டம்!

Share

இலங்கையின் விசேட பாதுகாப்பு திட்டம்!

இலங்கையின் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது.

இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,500 பேர் முப்படையைச் சேர்ந்த கூடுதல் அதிகாரிகளின் ஆதரவுடன் பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

52 வாக்கு எண்ணும் மையங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 131 வீதி தடுப்புகளை இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

இலங்கையில் பொதுத்தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

இதனையடுத்து 15ஆம் திகதியன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு வெளியாகிவிடும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...