3 13
அரசியல்இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்சவினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள விழிப்புணர்வு!

Share

நாமல் ராஜபக்சவினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள விழிப்புணர்வு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபவின் ”நாமலின் தொலைநோக்குத் திட்டம்” குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று (07) காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 160 ஆசனங்களையும் 13,268 வாக்களிப்பு நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேடர்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார வேலைகளின் ஒரு பகுதியாகவே இந்த தேசிய வேலைத்திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....