25 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Share

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு இலங்கையில் அனைத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் நடைபெறவிருந்த பல தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதற்கமைய, இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் உள்ளிட்ட ஏனைய தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல்களை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பமென டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பு ஒருபோதும் மீறப்படக்கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பை மீறும் வகையில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட யார் செயல்பட்டாலும், குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....