16 3
இலங்கைசெய்திகள்

வெளியானது 2025 இடைக்கால வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீடு விபரங்கள்

Share

வெளியானது 2025 இடைக்கால வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீடு விபரங்கள்

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவு திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்திலிருந்து அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்வதற்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 1,402 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

அதன்போது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது, அந்த தொகை 220.06 பில்லியன் ரூபாவாகும்.

மேலும், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 186.02 பில்லியன் ரூபா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 170.47 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 161.99 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 142.95 பில்லியன் ரூபா என இந்த இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 92 பில்லியன் ரூபா என்பதுடன், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 67.36 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...