19 31
இலங்கைசெய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் மூடப்படவுள்ள வீதிகள்

Share

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகைப் பணிகள் குறித்து கொழும்பு (Colombo) போக்குவரத்து பிரிவு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒத்திகை இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2025.01.29 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.01.30 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.01.31 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.02.01 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

2025.02.02 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை

இந்த விசேட போக்குவரத்து திட்டத்திற்கு அமைய மேற்குறிப்பிடப்பட்ட திகதிகளில் மூடப்படவுள்ள வீதிகளின் விபரம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

கருவாதோட்டம் விஜயராம மாவத்தையில் கல்லுாரி மாவத்தை திசைக்கு நுழைதல்.

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு நுழைதல்.

கருவாதோட்டம் பெளத்தாலோக்க மாவத்தையில் இருந்து பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தை திசைக்கு நுழைதல்.

கருவாதோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தையில் இருந்து மன்றக்கல்லுாரி வீதி திசைக்கு நுழைதல்.

கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்க திசைக்கு நுழைதல்.

ஆகிய வீதிகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...