3 40
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

Share

அரசியல்வாதிகளின் வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் திட்டம்

கடந்த அரசாங்கங்களின் போது முன்னாள் அமைச்சர்கள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்கள் பயன்படுத்திய பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விற்பனை செய்வது அல்லது பொது ஏலத்தில் விற்று பணத்தை திறைசேரிக்கு வரவு வைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக முன்கெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்துடன் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், செயலாளர்கள், அரச அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்திய பெருந்தொகையான சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த சொகுசு வாகனங்கள் அனைத்தும் கடந்த அரசாங்கங்களின் போது அரசியல்வாதிகள், செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நண்பர்களினால் பயன்படுத்தப்பட்டவை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனைத்து சொகுசு வாகனங்களுக்கும் எரிபொருள் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி செயலகம் ஊடாக பணம் செலவிட்டிருந்தது.

5 கோடி முதல் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொகுசு வாகனங்கள், அரசியல்வாதிகளால் நீண்ட காலமாக முறைசாரா வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்யவும் அல்லது வெளிநாட்டிற்கு பொது ஏலத்தில் விற்று, பொது நலனுக்காக திறைசேரிக்கு பணத்தை வைப்பிடவும் அரசின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...