24 6661cd51d1dbc
இலங்கைசெய்திகள்

சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி

Share

சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி

சர்வதேச ஓவியப்போட்டியில் இலங்கையைச் (Sri Lanka) சேர்ந்த சிறுமி ஒருவர் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

ஜப்பானில் (Japan) உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும் இணைந்து 23 ஆவது சர்வதேச சிறுவர் ஓவியப்போட்டி நடாத்தியது.

இதன்போது, புத்தளத்தில் உள்ள தேசிய பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பி மலிஷா நிர்மலி (15) என்ற சிறுமி பங்கு பற்றி முதலிடம் பெற்றுள்ளார்.

6 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் “இயற்கையை நேசிக்கும் குழந்தைகள்” என்ற தலைப்பில் இந்த ஓவியம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் உலகின் 83 நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிறுவர்கள் சமர்ப்பித்த ஓவியங்களில் இலங்கை முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், குறித்த சிறுமி தேசிய அளவிலான பல கலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

காலியில் உள்ள இலங்கை சிறுவர் கலை நிலையத்தின் பணிப்பாளர் பியசேன டி சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையிலிருந்து சிறுவர்கள் இந்த கலைப் போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பித்திருந்தனர்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...