24 6661cd51d1dbc
இலங்கைசெய்திகள்

சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி

Share

சர்வதேச ஓவியப்போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை சிறுமி

சர்வதேச ஓவியப்போட்டியில் இலங்கையைச் (Sri Lanka) சேர்ந்த சிறுமி ஒருவர் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

ஜப்பானில் (Japan) உள்ள யுனிசெப் அலுவலகமும், ஜப்பான் தரச்சான்றிதழ் அலுவலகமும் இணைந்து 23 ஆவது சர்வதேச சிறுவர் ஓவியப்போட்டி நடாத்தியது.

இதன்போது, புத்தளத்தில் உள்ள தேசிய பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பி மலிஷா நிர்மலி (15) என்ற சிறுமி பங்கு பற்றி முதலிடம் பெற்றுள்ளார்.

6 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் “இயற்கையை நேசிக்கும் குழந்தைகள்” என்ற தலைப்பில் இந்த ஓவியம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் உலகின் 83 நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிறுவர்கள் சமர்ப்பித்த ஓவியங்களில் இலங்கை முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், குறித்த சிறுமி தேசிய அளவிலான பல கலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

காலியில் உள்ள இலங்கை சிறுவர் கலை நிலையத்தின் பணிப்பாளர் பியசேன டி சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இலங்கையிலிருந்து சிறுவர்கள் இந்த கலைப் போட்டிக்கு ஓவியங்களை சமர்ப்பித்திருந்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...