24 660cebaf03c75
இலங்கைசெய்திகள்

தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திட்டம்..!

Share

தென் கொரியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திட்டம்..!

தென் கொரிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் காற்றுச்சீரமைப்பிகளின் (air conditioners) ஆற்றல் திறன் சோதனைக்கான ஆய்வகம் இலங்கையில் விரைவில் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பச்சை வீட்டு வாயு உமிழ்வை குறைக்கும் நோக்கத்திலேயே தென் கொரியா இந்த ஆய்வகத்தை நிறுவ உதவுவதற்கு முன்வந்துள்ளது, அதன்படி இந்த திட்டத்திற்கு கொரியா எரிசக்தி ஏஜென்சி மூலம் நிதியளிக்கப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில், ஆய்வகத்தை நிறுவுதல் மற்றும் தேவையான மனிதவள பயிற்சி ஆகியவற்றை இந்த ஆண்டிற்குள் (2024) நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தென்கொரிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கையொப்பமிடவுள்ள குறிப்பாணை மற்றும் பரிந்துரைகளும் வெளியிடப்படவுள்ளது.

இதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பான உடன்படிக்கை ஒன்றும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இந்த உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிந்துரைகளில் கைச்சாத்திடுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த வாரம் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...