12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

Share

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட குறித்த போதைப்பொருளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது இலங்கையில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கைப்படி, இந்த ‘மெஃபெட்ரோன்’ போதைப்பொருள், ‘ஐஸ்’ போன்ற ஏனைய போதைப்பொருட்களை விட மிகவும் அபாயகரமானது எனத் தெரியவந்துள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி வெலிகமையில் கைது செய்யப்பட்ட மொல்டோவாவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் கைப்பற்றப்பட்ட பொருளைப் பரிசோதித்தபோதே, இந்த புதிய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...