இலங்கைசெய்திகள்

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

25 678e6a04bf846
Share

ஒன்றிணையப்போகும் ரணில் – சஜித் தரப்புகள்: செயற்குழு எடுத்துள்ள முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை இணைப்பதற்கான கலந்துரையாடல்களைத் தொடங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் பெற்றுள்ளது.

இன்றையதினம் (20) இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், புறக்கோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட செயற்குழு முடிவு செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல ஆகியோரின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...