24 6621fb298b44c
இலங்கைசெய்திகள்

சஜித் அணியில் இருந்து ரணில் பக்கம் தாவும் உறுப்பினர்கள்

Share

சஜித் அணியில் இருந்து ரணில் பக்கம் தாவும் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் (Beliatta) தேர்தல் தொகுதி அமைப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.

இவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் அங்கத்துவத்தை நேற்று (18.04.2024) பெற்று கொண்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நந்தன அத்தபத்துவின் மகன், பிரவீன் ருவிந்த அத்தபத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பெலியத்தைத் தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராக செயற்பட்டு வந்திருந்தாா்.

இந்நிலையிலேயே, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவிடம் (Vajira Abeywardena) கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...