2 1
இலங்கைசெய்திகள்

வடக்கு மக்களுக்கு சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை : சஜித் தரப்பு ஆதரவு

Share

வடக்கு மக்களுக்கு சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை : சஜித் தரப்பு ஆதரவு

வடக்கு மக்களுக்கும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்(Saidulla Marikka) தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மக்களுக்கான வசதிகளை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை. ஐ.தே.க. அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வடக்கிற்கு ஒரு சட்டமும், தெற்கிற்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது என்றும், முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக பொலிஸ் போன்றவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் சிக்கல் இல்லை.

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் பெரும்பாலானவை மாகாணசபைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி நிறுவனங்கள் அனைத்தும் கூட மாகாணசபைகளின் கீழேயே உள்ளன.

அவர் கூறியதன் அர்த்தமும் இதுவே. அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல. அவ்வாறெனில் தற்போதுள்ளதுடன் சில விடயங்கள் இணையும்.

அந்த வகையில் சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

ஆனால் நான் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரிடம் எதனையும் கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...