3 25
இலங்கைசெய்திகள்

ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்த கட்சித் தலைமை

Share

ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்த கட்சித் தலைமை

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமை ஏற்க மறுத்துள்ளது.

கொழும்பில் தனது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறி, இந்த பதவி விலகலை பிரேமச்சந்திர சமர்ப்பித்த போதும், அதனை கட்சி ஏற்க மறுத்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்படி கட்சி மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக பிரேமச்சந்திரவைத் தொடருமாறு கட்சி கோரியுள்ளதுடன் அவர் அதற்குச் சம்மதித்துள்ளார் என்றும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தேர்தல் பிரசாரத்தின் போது ஹிருணிகா பிரேமச்சந்திரவால் அதனைச் செய்ய முடியாவிட்டால், கட்சியின் மகளிர் பிரிவின் மற்ற பெண் உறுப்பினர்கள் அவரின் பணிகளை மேற்பார்வையிட உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...