tamilnaadi 132 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்

Share

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்

நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக மற்றுமொரு தெற்கு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது கிடைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தியும், ஒழங்கமைப்பு வலையமைப்பும் கொண்ட கட்சிகள் இரண்டு மட்டுமே இலங்கையில் உள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி எனவும் மற்றையது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மட்டுமே இருக்கின்றார்.

இந்த நிலைமைகளின் கீழ் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...