tamilnaadi 132 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்

Share

ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் பசில்

நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக மற்றுமொரு தெற்கு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது கிடைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தியும், ஒழங்கமைப்பு வலையமைப்பும் கொண்ட கட்சிகள் இரண்டு மட்டுமே இலங்கையில் உள்ளதாகவும் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தி எனவும் மற்றையது ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டை ஆட்சி செய்யக்கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மட்டுமே இருக்கின்றார்.

இந்த நிலைமைகளின் கீழ் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...