3 41
இலங்கைசெய்திகள்

ஹிருணிக்காவிற்கு தேசிய பட்டியல் ஆசனம் …! ஹர்ஷ டி சில்வா

Share

ஹிருணிக்காவிற்கு தேசிய பட்டியல் ஆசனம் …! ஹர்ஷ டி சில்வா

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோருக்கு தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்க கலந்தோலோசித்து வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (21.11.2024) அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எரான் விக்ரமரத்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோர் கட்சிக்காக கடுமையாக உழைத்துள்ளதாகவும் ஹர்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் தேசிய பட்டியல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசிய பட்டியல் ஆசனமொன்றை வழங்குமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான்(senthil thondaman) வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...