6 43
இலங்கைசெய்திகள்

சஜித் அணியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

Share

சஜித் அணியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய மனோ கணேசன் (Mano Ganesan), நிசாம் காரியப்பர் (Nisam Kariyappar), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), மொஹமட் இஸ்மாயில் (Mohamed Ismail) ஆகியோர் நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, புதிய சபாநாயகரை தெரிவு செய்யும் பணிகள் பிரதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஊடக அறிக்கைகளின் படி, கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கலாநிதி ஜகத் விக்ரரத்னவின் (Jagath Wickramarathne) பெயர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், எதிர்க்கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஹினி கவிரத்னவின் (Rohini Kavirathna) பெயரை பரிந்துரைக்க எதிர்க்கட்சி தயாராகி வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தேசியப் பட்டியல் உறுப்பினராக இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்த நிலையில் ஏனைய நால்வரின் பெயரும் கடந்த 12ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...