24 65fd248fead86
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் வாய் புற்றுநோய்கள்

Share

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் வாய் புற்றுநோய்கள்

இலங்கையில் அதிகளவான வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக பல் வைத்திய பிரிவின் தலைவர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

” இலங்கையில் தினமும் ஆறு புதிய வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகி வருவதுடன் நாளொன்றில் மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.

சுமார் 50 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதில்லை. மேலும், 20 வீதமான இலங்கையர்கள் புளோரைட் இல்லாத பற்பசைகளைப் பயன்படுத்துகின்றனர். இவை கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

மேலும், ஒருவர் வருடத்திற்கு 10 கிலோவிற்கும் குறைவான சீனியை உட்கொள்ள வேண்டும். இருப்பினும், சராசரியாக ஒரு இலங்கையர் ஒரு வருடத்திற்கு 34 கிலோ சீனியை உட்கொள்கிறார்.

ஒரு குழந்தை இனிப்புக்களை உட்கொள்வதற்கு இடையில் குறைந்தபட்சம் இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியாவது இருப்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. இருப்பினும், நுகர்வுக்கு இடையே இடைவெளி இருக்க வேண்டும். அது மாத்திரமன்றி புளோரைட் அடங்கிய பற்பசையைக் கொண்டு பல் துலக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...