1 50
இலங்கைசெய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு இலங்கையில்

Share

தென்னிந்திய நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அதே படத்தில் நடித்துவரும் மற்றொரு நடிகரான ரவி மோகன் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, மதுரையில் நடைபெற்றுவந்த குறித்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, அடுத்தகட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.

1960களில் தமிழகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது.

குறித்த திரைப்படத்தில் நடிகர்கள் அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...