24 6665463656ff9
இலங்கைசெய்திகள்

மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த அமைச்சர் பணிப்புரை

Share

மாணவர்களின் போக்குவரத்தை இலகுபடுத்த அமைச்சர் பணிப்புரை

மாணவர்களுக்காக இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC)பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சேவை 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் பாடசாலை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை போக்குவரத்து சபையின் 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்கு ஆண்டுதோரும் 2000மில்லியன் ரூபா ஒதுக்குகிறது.

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேருந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாகாணத்தின் பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முன்மொழிவை அனுப்பிய பின்னர், அந்தப் பகுதிகளுக்கு பேருந்துகள் அனுப்பப்படும்.

தீவு முழுவதையும் உள்ளடக்கும் வகையில், ஒரு பேருந்து மூலம் அதிகபட்ச பள்ளிகளுக்கு செல்லும் ஒரு பேருந்து சுமார் மூன்று பாடசாலைகளை உள்ளடக்குவதுடன், 500 புதிய பேருந்துகள் கிட்டத்தட்ட 1,500 பள்ளிகளை உள்ளடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிசு செரிய திட்டத்தின் நோக்கம், பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்கும் வாய்ப்பை வழங்குவதாகும்.

இந்தச் சேவையானது மானியக் கட்டணத்தில் செயல்படும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப ஊக்குவிப்பதோடு, குடும்பங்களுக்கு நிதி சுமையும் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...