6 4 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய சிங்களத் தாய்: கனடாவிலிருந்து தேடி வந்த தமிழர்

Share

தமிழ் குடும்பத்தை காப்பாற்றிய சிங்களத் தாய்: கனடாவிலிருந்து தேடி வந்த தமிழர்

இனக்கலவரமொன்றின் போது தமிழ் குடும்பமொன்றை காப்பாற்றிய சிங்களத் தாயை பல வருடங்களின் பின்னர், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபர் சந்தித்த காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சுமார் 35 – 40 ஆண்டுகளுக்கு முன்னர் இனக் கலவரத்தின் போது குறித்த சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் குடும்பம் ஒன்றை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த தமிழ் குடும்பம் புலம்பெயர்ந்து கனடா சென்றுள்ளதாக அந்த காணொளியில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே தம்மை மீட்ட அந்த சிங்களக் குடும்பத்தை நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேடிச் சென்று சந்தித்துள்ளனர்.

காப்பாற்றிய தாயும், காப்பாற்றப்பட்ட குடும்பத்தை சேர்ந்த நபரும் அழும் காட்சி அனைவரும் நெகிழச் செய்துள்ளது.

இதேவேளை தமிழ் குடும்பத்தை பாதுகாத்தமைக்காக தம்மை சிங்களவர்கள் தூற்றியதாகவும் அச்சுறுத்தியதாகவும் சிங்களத் தாய் கூறி கதறியழும் காட்சி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...