24 10
இலங்கைசெய்திகள்

அதிகாலைவேளை பயங்கரம் : பெண்ணை மோதி கொல்ல வந்த காரால் பரபரப்பு

Share

அதிகாலைவேளை பயங்கரம் : பெண்ணை மோதி கொல்ல வந்த காரால் பரபரப்பு

பெண்ணொருவரை மோத வந்த கார்மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தியபோதிலும் அந்தக்கார் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுவலை காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று(10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் கடுவலை காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் மோட்டார் சைக்கிளில் வருவதாகவும், தன்னை காரொன்று விபத்தை ஏற்படுத்தி கொல்வதற்காக பின்தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக செயற்பட்ட காவல் நிலையத்தின் இரவுக் கடமைக்குப் பொறுப்பான அதிகாரியும் பிரதான வாயிலில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரும் வீதிக்கு வந்து தயாராக இருந்த நிலையில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் அதிவேகமாகப் பின்தொடர்ந்து வந்த காரை நிறுத்த முற்பட்டனர்.

எனினும் காரின் சாரதி காவல்துறை அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதும், கார் தப்பிச் சென்றுள்ளது.

தற்போது, ​​குறித்த 38 வயதுடைய பெண், காவல்துறை பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மற்றும் சாரதியை கைது செய்ய விசாரணை குழுக்கள் ஈடுபட்டுள்ளன .

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...