24 10
இலங்கைசெய்திகள்

அதிகாலைவேளை பயங்கரம் : பெண்ணை மோதி கொல்ல வந்த காரால் பரபரப்பு

Share

அதிகாலைவேளை பயங்கரம் : பெண்ணை மோதி கொல்ல வந்த காரால் பரபரப்பு

பெண்ணொருவரை மோத வந்த கார்மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தியபோதிலும் அந்தக்கார் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுவலை காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இன்று(10) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் கடுவலை காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து தான் மோட்டார் சைக்கிளில் வருவதாகவும், தன்னை காரொன்று விபத்தை ஏற்படுத்தி கொல்வதற்காக பின்தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைய உடனடியாக செயற்பட்ட காவல் நிலையத்தின் இரவுக் கடமைக்குப் பொறுப்பான அதிகாரியும் பிரதான வாயிலில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரும் வீதிக்கு வந்து தயாராக இருந்த நிலையில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் அதிவேகமாகப் பின்தொடர்ந்து வந்த காரை நிறுத்த முற்பட்டனர்.

எனினும் காரின் சாரதி காவல்துறை அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போதும், கார் தப்பிச் சென்றுள்ளது.

தற்போது, ​​குறித்த 38 வயதுடைய பெண், காவல்துறை பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மற்றும் சாரதியை கைது செய்ய விசாரணை குழுக்கள் ஈடுபட்டுள்ளன .

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...