tamilni 411 scaled
இலங்கைசெய்திகள்

விசாரணை வளையத்துள் சவேந்திர சில்வா!

Share

விசாரணை வளையத்துள் சவேந்திர சில்வா!

முப்படைகளின் தளபதி சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற கலவரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போராட்டக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதையும், அதன்படி இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் இரகசிய காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கையின்படி, அப்போது இராணுவத் தளபதியாக பதவி வகித்த சவேந்திர சில்வாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...