1 4
இலங்கைசெய்திகள்

சபையை சந்தைக் கடையாக மாற்றிய சாணக்கியன் மற்றும் அர்ச்சுனா – தடுமாறிய சபாநாயகர்

Share

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனா இராமநாதனால் நாடாளுமன்றில் இன்று(4) அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியபோது அவரின் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டதால் சச்சரவு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்க முயன்ற போது, சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.

அதேபோல், இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் கூறியதால் சபையில் குழப்பநிலை உண்டானது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் எங்களுடை பிரச்சினையை பேச அனுமதி மறுக்கப்படுகின்றது என்று குழப்பநிலை உருவானது.

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் தலையிட்டு நிலையியல் கட்டளைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்களுக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்தும் பிரச்சினை பெரிதானதால் சபாநாயகர் “சிட் டவுண்” என கோபத்தில் கத்தினார்.

Share
தொடர்புடையது
16 11
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு ஊழல்: முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ‘எயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி...

15 11
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: FBI அறிக்கையை மேற்கோள் காட்டி சஞ்சீவ எதிரிமான்ன விளக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்குத் தேவாலயங்களைக் காட்ட சுரேஷ் சலே போன்ற ஒருவரின் உதவி...

14 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்: இயந்திரங்களுக்குச் சேதமில்லை என கோப் (COPE) குழு உறுதி!

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால், அங்குள்ள மின் உற்பத்தி...

13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...